Cool

Cool

Thursday, November 14, 2019

காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுப்பது எப்படி?

காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுப்பது எப்படி?

🛡 *இனி வீட்டில் இருந்தே காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுக்கலாம்*

🔅மிகமிக எளிதான முறையில்....

🔅தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR)சமீபத்தில் துவங்கியது. 

🔅இந்த புது சேவையின் மூலம் புகார் கொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்த்து,

🏡 வீட்டில் இருந்தப்படியே இணையத்தின் உதவியுடன் புகார் கொடுக்கலாம். இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.

🔅 இந்த ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

🔅இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம். தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
 
 
🔅உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்..

 
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1
 
🔅மேலேக் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின்
 
*District:* உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ.கா: சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர்)
 
*Name:* புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் பதிவு செய்யவும்
 
*Date of Birth:* புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும்
 
*Address:* புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும்
 
*Mobile Number:* புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும்
 
*Email ID:* புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்..

*Subject:* உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
 
*Date of Occurrence:* நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்
 
*Place of occurrence:* நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்
 
*Description:* உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்
 
*Want to attach Documents* [Max. 4MB(PDF, PNG, JPEG) Files alowed]:உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.
 
*Security Code:* இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுக்காப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்
 
*Register:* அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான  Acknowledgement No. உங்களுக்கு வழங்கப்படும்...அந்த நம்பரை பயன்படுத்தி ஆன்லைனிலேயே நமது புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்....

🔰Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் Acknowledgement Numberஐ பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
🔅இது போன்ற தொழிநுட்ப முன்னேற்றங்கள் நமது நேரத்தையும், அலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை அதிகளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான தீர்வும் விரைவில் கிடைக்கும். எனவே இது போன்ற தொழில்நுட்பங்களை நல்ல விதங்களில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.

No comments:

Post a Comment